
இது "கந்தசாமி" திரைவிமர்சனம் அல்ல!!
"கந்தசாமி" ... நொந்தசாமி... கந்தல் சாமி.... எனப் பதிவுலகம் துவங்கிப் பத்திரிக்கை உலகம் வரை டார் டாராகக் கிழிக்கப்பட்டுவரும் இந்தப் படத்தை வந்த அன்றே பார்த்தாகிவிட்டது!
இந்தமாதத்திலிருந்து கொஞ்சம் ஜரூராக எழுதிவருவதால்... "கந்தசாமி: விமர்சனம்" என்று ஓர் இடுகை இன்று இரவு எழுதுவதற்குத் தயாரான நிலையில் இருக்கும் என்ற உற்சாகத்தோடு நண்பர்களுடன் கிளம்பிப்போனேன்.... படம்பார்த்து வந்தவுடன் கணிணியைத் திறந்து ஒரு விமர்சனத்தையும் தடதடவென கொட்டித் தீர்த்துவிட்டேன்..... மூன்று மணிநேரத்துக்கும் மேலாகப், படத்தின் வில்லன்களை விட அதிகமாக அடிவாங்கிய கோபத்தில், பதிலடிகளை வெடித்துத் தள்ளிக்கொண்டிருந்தேன்..... அப்போது ஏதோவொன்று மனதுக்குள் தோன்ற அந்த இடுகையைப் பதியாமலேயே விட்டுவிட்டேன்....
வேறென்ன..... "இன்னா செய்தாரை ஒறுத்தல்..." திருக்குறள்தான் மனதுக்குள் தோன்றியது!!!...... "நன்னயம் செய்து விடல்" என்று பாஸிடிவ்வாக ஒரு விமர்சனம் எழுதியிருக்கலாமே (விகடனைப் போல!) என்று கூடத் தோன்றியது ஆனால் ஒரு பாவமும் அறியாத என் நண்பர்களுக்கு இன்னா செய்தலையும் நான் விரும்பவில்லை...... அவர்களாகவே ஆசைப்பட்டு ஆளுக்கொரு தியேட்டரில் அகப்பட்டு யான்பெற்ற "இன்பத்தை"த் தானும் பெற்று ஐ.எஸ்.டி கால்போட்டு எனக்கு அர்ச்சனைகள் செய்தபின்தான் இதையும் எழுதுகிறேன்.....!! எப்படியோ எந்தப் பாவத்திலும் எனக்குப் பங்கில்லை!!!
இனிமேல் "விமர்சனம்" எழுதப்போவதில்லை என்று நினைத்திருக்கிறேன்.... எதற்கு விமர்சனம்....?? சினிமா பார்க்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம்.... எனது "காரணங்களை"த் தெளிவுபடுத்திக் கொள்ள உதவியமைக்குக் "கந்தசாமி"க்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும்!! இத்தனைக்கும் நான் எந்த மரத்திலும் எதுவும் எழுதிவைக்கவில்லை.... தானாக வந்து வேண்டிய வினைதீர்த்தார் கந்தஸ்வாமி!!
நிச்சியம் படங்களில் நல்லபடம் கெட்டபடம் என்று எதுவும் இல்லை.... எனக்குச் சின்ன வயது கனவு ஒரு திரைப்பட இயக்குனராவது என்பது!! அந்த ஆர்வத்தில் "திரைக்கதை" என்னும் மந்திரத்தைத், திரையுலக வாசம் கொஞ்சமுமின்றிப் புத்தகங்களாலும், சினிமாக்களாலும் பயிலத் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.. அட ரெண்டு ஸ்க்ரிப்ட் கூட வைத்திருக்கிறேன்!!
1) INT Day / xxxxxx
Fade in
xxxx xxxxx xxxxx
என்றெல்லாம் பக்கா Proffessional ஆக "முவீ மேஜிக்" சாஃப்ட்வேர் வைத்தெல்லம் நாங்க திரைக்கதை எழுதியிருக்கோம்ல!!!
இப்படியெல்லாம் பம்ப் அடித்தாலும்.... பீட்டர் விட்டாலும்.... திரையுலகத்துக்கு வெளியே இருந்துகொண்டு திரைப்படம் பயிலமுயற்சிப்பது, அஞ்சல்வழியில் நீச்சல் கற்றுக்கொள்வதற்கு சமமான காமெடிதான்... தெரிந்திருந்தும் ஏனோ நான் இன்றுவரையிலும் கோடம்பாக்கத்துக்கு ஒரு கேஷுவல் விசிட் கூட அடித்ததில்லை.... ஆனாலும் இன்றுவரை யார்கேட்டாலும் தவறாமல் சொல்லும் பஞ்ச் டயலாக்....
"நாங்களும் வருவோம்ல...!!" என்பதுதான்!!
ஹி ஹி ஹி.... கிடக்கட்டும்... அது தனிகதை.....
ஸோ பர்சனலாக நான் "கந்தசாமி" பார்த்ததால் குறையொன்றுமில்லை!! அதைத் திட்டி விமர்சனம் எழுதும் நேரத்தில் வேறு ஒரு நல்லபடம் பார்க்கலாம்.... அல்லது ஒரு சிறுகதை எழுதுவது எனக்கு நலம்... என்று தோன்றியது..... ஒருவேளை என் கனவு நினைவாகித் திரைஉலகத்தின் "டைரக்டர்" சேரில் அமர நேர்ந்தால்.... மூன்றுமணி நேரம் இந்தத் தியேட்டர் இருக்கையில் நெழிந்த தருணங்களை நினைவில் வைத்து சில தவறுகளைக் கூடக் களையலாம் பாருங்கள்!! (எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறாய்ங்க!!)
மொத்தமாகப் பழைய படங்களின் தாக்கங்கள் ஆக்கிரமித்தாலும் "கந்தசாமி"யில் சில பளிச் விஷயங்களும் இருந்தன என்பதையும் குறிப்பிடுவதுதான் நேர்மை...
Well..... சினிமா ஆசையைப் பதிவுலகில் பகிர்ந்துகொள்ள விழைந்தேன்.... அதற்கொரு வாய்ப்பாக அமைந்துவிட்ட கந்த.. கந்த... கந்த...கந்த... கந்தசாமீக்கு மீண்டும் நன்றி!! குறையொன்றுமில்லை கந்தா!!!

