வணக்கம்!!

அன்பு ந‌ண்ப‌ர்க‌ளுக்கு வ‌ண‌க்க‌ம்!!
இணைய‌த்தில் த‌மிழில் எழுதிப் ப‌திப்ப‌து ஓர் ஆன‌ந்த‌ அனுப‌வ‌ம்!! இத‌னை சாத்திய‌மாக்கிய‌ அனைத்துத் த‌மிழ்த் தொழில்நுட்ப‌ வ‌ல்லுநர்க‌ளுக்கும், க‌ணிணி பொறியாள‌ர்க‌ளுக்கும் முதலில் என் ந‌ன்றிக‌ள்!!!
"வாச‌க‌ர் தேவை!!" = ஆம்...இதுதான் உண்மையில் என‌க்கும், என் போன்றோருக்கும் முக்கியத் தேவை...தேட‌லும் கூட‌!க‌ல்லூரி நாட்க‌ளில்...மாசற்ற அழகிய வெள்ளைத்தாள்களைப் போல‌ என்னைக் க‌வ‌ர்ந்திழுத்த‌ வேறு பொருள் எதுவும் இல்லை!!...எதையாவ‌து எழுத‌வேண்டும் என்று ஓர் உண‌ர்வு...திடீரென்று, வண்டியில் சென்று கொண்டிருக்கும் போதோ...இல்லை ஏதேதோ வேலைக‌ளில் மூழ்கியிருக்கும் போதோ..முக்கிய‌மாக‌த் தூங்கும் போதோ, திடீரென்று ம‌ன‌தைக் கீறிடும் என்ன‌வோ மாதிரியான‌ ஒரு வார்த்தை மின்ன‌ல்!!...அதை எழுத்தில் வ‌டித்திட‌, பதித்திட‌த் துடிக்கையில் வெள்ளைத்தாளின் அழ‌கை, அந்த‌ நிற‌த்தின் சிற‌ப்பை...க‌ண்க‌ள் ர‌சித்து வெறிக்கும்! எந்த‌தூக்க‌த்திலும் விழித்து, தாளில் பேனாவை உர‌ச‌விட்டுவிடுவேன்...ம‌ன‌ அலையைப் ப‌திக்கும் முத‌ல் முய‌ற்சி அது!!காகித‌த்துக்கு வ‌லிக்காம‌ல் என் பேனா தாள்ப்ப‌ரப்புக்கு ச‌ற்று மேலே காற்றில் கிறுக்கும்!...சில நொடிகள்தான் காகித‌த்தில் அக‌ப்ப‌டாமலேயே அந்த‌ மின்ன‌ல் க‌ண்ணெதிரே க‌ரைந்து போகும்...வெள்ளைவெளியில், பேனாமுனையால் ஒரு சிறு பொட்டை ம‌ட்டும் த‌ட‌ய‌மாய் விட்டுவிட்டு!!! நீங்க‌ளும் எழுதுவீர்க‌ளா?? எனில் இது உங்க‌ளுக்கும் மிக‌வும் ப‌ழ‌கிய‌ அனுப‌வ‌மாக‌ இருக்குமே!! ஆம்..இதைத்தான் சொன்னேன்....என‌க்கும், என்னைப்போன்றோருக்கும் பொதுவான‌ தேட‌ல்தான் இது என்று!!
என‌வே எழுதுகிறேன்....மீண்டும் மீண்டும்...அதே த‌லைப்பு தான்....."வாச‌க‌ர் தேவை"!!!!
மென்சிரிப்புட‌ன்,
எம். பிர‌பு!!

4 comments:

Sarathy said...

madhurai'th thamizh maNam ungaL ezhuthukkaLil thodarndhu vessattum!!

Arun said...

nalla ezhuthukkal... melum ezhudha vaazhthukkal...

Gokul Kesavalu said...

i think u r multitalented personality.. keep it up. May all ur wishes come true..

cheena (சீனா) said...

அன்பின் பிரபு - வாசகர் தேவை - உண்மை - ஆனால் இப்பொழுது அல்ல - எழுத்துகள் வாசகர்களைக் கவர்ந்திழுத்துக் கொண்டு வருகிறது.

நல்வாழ்த்துகள் - எழுதுக - எழுதிக்கொண்டே இருக்க வாழ்த்துகள்

Post a Comment