இலக்கியம்!!

இலக்கியம்.... தங்கவயல் அது...திறந்தவெளித் தங்கவயல்!! காவலெல்லாம் கிடையாது....கைப்பிடித்து வழிகாட்ட சிலருக்கு சிலர் கிடைப்பதுண்டு, வாழும்நாளில் இயன்றவரை அறுத்துக்கொள்ளலாம்...தங்கவயலில் அறுவடை இலவசம்!!...எனினும் இங்கு அறுப்போர் குறைவு!! எனக்குத் தெரிந்தவரை இதுதான் இலக்கியம்!!....."மொழி" யெனும் பயணச்சீட்டு இருந்தால் காகிதவெளியில் உலகையே பவனி வரலாம்...வரலாறும் புவியியலும் சூரியஒளிபடும் மணல்வெளிகளையும் பதிவு செய்யும்...இலக்கியமோ..மனிதத்தடம் பதிந்த மணல்வெளிகளை மட்டுமே பதிவு கொள்ளும்....பதித்துச் செல்லும்!!
"அசோகர் சாலையோரத்தில் மரங்களை நட்டார்" = இது வரலாறு... சுந்தர ராமசாமியின் "ஒரு புளியமரத்தின் கதை"யோ இலக்கியம்!! மேலோட்டமாய் சொன்னால்...இது உணர்வுகளின் மொழிவடிவம்!! இங்கு என்னையே கூட நான் சந்திக்க நேரலாம்...இன்னொரு பாத்திரத்துக்குள் நானே கூட உயிர் வாழலாம்!! இந்த அதிசியங்கள் வேறெங்கு சாத்தியம்?? மனிதர்கள்....சாதரணமாக நம் கண்ணில் படும் அசைவினங்கள்...ஆனால் மனங்களைப் பார்த்ததுண்டோ?? நாமும்தான் காட்டியதுண்டோ?? மனங்களைப் படிக்கலாம் இங்கு!!
வெகுஜனப் படைப்புகளையும் சாட வேண்டியதில்லை....அவை.. மேல்தோலின் மயிர்க்காலில் பல சாகசங்கள் புரிபவை!! புல்லரிக்க வைக்கும் ரசாயனம் நன்கு அறிந்த பேனா வல்லுநர்கள் மொழிகள் தோறும் ஏராளம்!! அவற்றையும் ரசிக்க வேண்டும்...எனினும் மேல்பரப்பில் சிறிது நேரம் அதிக சுகமின்றி வருடிக்கொடுத்துவிட்டு....விருட்டென்று விரல்களை ஆழத்தில் செலுத்தி இதயப்பரப்பை லேசாகத் தீண்டிவிட்டுக் கொஞ்சமே கொஞ்சம் வலியுடன் எத்தனையோ வாழ்வியல் உண்மைகளை விளங்க வைத்திடும் வல்லமை பெற்ற எழுத்துக்கள், படைப்புகளும் உள்ளனவே அவை உலகுள்ள காலம் வரை எங்கேயோ... யாரேனும் ஒரு மனிதனைப் பாதித்துக் கொண்டுதான் இருக்கும்!! இதயம்தனில் நகக்கீறல் பட்ட கணம்...எவனோ ஒருவனின் வலி நமக்கு வலிக்கும்...அவன் கண்ணீர் நமக்குக் கரிக்கும்!!....அவனது சாயலாய் எத்தனையோ சகமனித மனங்கள் அகத்தால் படிக்கப்பெறும்!! மனங்களைப் படிக்க வாருங்கள்....தங்கவயல் இது...அறுவடை இலவசம்!!!

ச‌க‌ வாச‌க‌ன்,
பிர‌பு.எம்

1 comments:

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

You started to write in nice way..but i am not seeing many posts here.. try to write atleast once in week... best of luck...

Post a Comment